எங்க ஊர் மக்களின் நாட்டுப் பற்று
எங்கள் ஊர் உடுமலைப்பேட்டை, ரொம்ப சின்ன ஊராகத் தான் இருந்தது. ஆனாலும் , தேச பக்திக்கு பெயர் போனது . பின்னால், கோவை மாவட்டத்திற்கே உரிய அதி வேகத் தொழில் வளர்ச்சியால், இப்பொழுது ரொம்பவும் வளர்ந்து விட்டது. நகரின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தொழிற்சாலையான பழனி ஆண்டவர் மில்ஸ் காந்தி யடிகளால் அடிக்கல் நாட்டப் பட்டதாம் . சின்ன ஊராக இருந்த போதே, தேசத் தலைவர்களின் நினைவாக ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்திருந்தார்கள். அவற்றில் சில: நேதாஜி மைதானம் - பெரிய விளையாட்டுப் போட்டிகள் இங்குதான் நடைபெறும் . காந்தி சவுக் - நகரின் மையப் பகுதி . நேரு வீதி - வ . உ . சி . வீதி : நகரின் குறுக்கே செல்லும் மிகவும் பரபரப்பான வீதிகள் . சர்தார் வீதி - சர்தார் வல்லபபாய் படேல் நினைவாக ஒரு முக்கிய வீதி . காந்தி நகர் - ஒரு பெரிய காலனி இப்பொழுதோ, ரியல் எஸ்டேட்காரர்கள், தங்கள் பெயரையும், தங்கள் குழந்தைகளின் பெயரையும் தான் வீதிகளுக்கும், காலனிகளுக்கும் வைக்கிறார்கள்!