இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்மூர்க்காரங்க எழுதுனது:

கொல கொலயா முந்திரிக்கா : http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_29.html கொங்கு பாஷை : http://konguvaasal.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 நம்மூரு வரலாறு: http://konguhistory.blogspot.com/ கரூரைப்பற்றிய ஒரு அருமையான ஆராய்ச்சி நூல் . நேரமிருந்தால் அவசியம் படிக்கவும் : http://tamilartsacademy.com/books/roman%20karur/cover.html கொங்குநாட்டு வரைபடம் : http://kongunadumaps.blogspot.com/2008/01/blog-post.html கொங்கு சிறப்பிதழ்: http://swadesipon.blogspot.com/

ஆடி நோம்பி....

தீபாவளி,பொங்கலுக்கு அடுத்து ஆவலோட எதிர்பார்த்திட்டு இருக்கிற நோம்பி இந்த ஆடி நோம்பி தான்.காவிரி சூலூர் பக்கம் பாயலைங்கறதுக்காக ஆடி நோம்பியைக் கொண்டாடாம இருக்க முடியுமா??மே மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பின்னாடி வர்ர மொத லீவு இந்த ஆடி நோம்பிக்குத்தான். இது தான் முக்கிய காரணமின்னாலும் தூரியாடறது, பட்டம் உடுறது, தேங்காயை வாட்டி சாப்பிடறதுன்னு இந்த நோம்பியை எதிர்பார்த்திட்டு இருக்க இன்னும் பல காரணங்கள் இருக்கு. ஆடி 18 என்ன கெழமை வருதுன்னு அப்பா ஒரு மாசம் முன்னாடி பார்த்து சொல்லுவாரு. எங்க அத்தை ஊட்டுக்குப் போறதா இல்லை அவங்க இங்க வருவாங்களான்னு ஒரு பத்து நாளைக்கு வீட்டில பெரியவங்க டிஸ்கஷன் பண்ணுவாங்க.முடிவென்னமோ எப்பயும் போல அவங்க இங்க வருவாங்கன்னு தான் எடுப்பாங்க.அப்புறம் வழக்கம் போல எங்க அத்தை,மாமாவை நோம்பிக்குக் கூப்பிட எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வருவாரு. அம்மியே பறக்கர மாதிரி அடிக்கற ஆடிக்காத்தில தூரி கட்டி ஆடாட்டி அப்புறம் அந்தக் காத்துக்கு என்ன மருவாதை? நோம்பிக்கு முன்னாடியே, வெள்ளிக்கெழமை சந்தையில போயி தண்ணி சேர்ந்திற கயிறு வாங்கிட்டு வந்து வச்சிருப்பாரு. எனக்கு ஒண்ணு,...

மெயின் ஃபிரேம் கோயிஞ்சாமி

கடுப்பாகத் தான் இருக்கிறது, மூன்றாம் முறை இதையே எடுத்துப் போட. என்ன செய்வது, இப்போதுதான் கண்ணன் மூலம் பிரச்னை தலைப்பின் நீளத்தில் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அதனால், மீண்டும், ரிப்பீட்டேய்! ------------------ இடது கண்ணில் -3.5, வலது கண்ணில் -4.5 என்று தாராள மனதாக ஏராள எண்களை அந்தக் கண் மருத்துவர் உதிர்த்தபோது அப்பா வாங்கிக் கொடுத்த கோல்ட் ·ப்ரேம் கண்ணாடிதான் கோயிஞ்சாமியின் அடையாளமாகிப்போனது. அப்பா கூட்டிப்போய் சேர்த்துவிட்டதுதான் சுவாமி வாத்சல்யானந்த குருஜி அருளாசி பெற்ற ஐயாறுடையப்பன் இன்ஸ்டிடியூட் ஆ·ப் டெக்னாலஜி (சுருக்கமாக ஐ.ஐ.டியாம்). மெட்ராஸ் யூனிவர்சிட்டி கீழ் வருகிற காலேஜ். மூளையெல்லாம் செலவு செய்து படிப்பது சரஸ்வதிக்கு செய்யும் அநீதி அல்லவா? அதனால், சமத்தாக மார்க்கெட்டு கெயிடு மட்டும் படித்து மார்க்கு வாங்கினான் கோயிஞ்சாமி. எட்டு செமஸ்டர் எக்கிப்பிடித்ததில் எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி ஆனான். ஐயாறுடையப்பன் வெறும் விபூதி மட்டுமே அருள் பாலித்திருந்த நிலையில் தெண்டச்சோற்று எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி என்று அவனது பெயர் மட்ட...

கோயிஞ்சாமியின் ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர்

ஊத்திக்கினு கடிப்பதும், கடிச்சுக்கினு ஊத்திப்பதும் கோயிஞ்சாமிக்கு ஒரு ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த ப்ராஜக்ட் ஒரு இணையதள கட்டுமானத்துக்கானது. அந்த ப்ராஜக்ட்டில் பயனருக்குக் காண்பிக்க ஒரு நாட்காட்டி தேவைப்பட்டது. அந்த காலண்டரை ஜாவாஸ்க்ரிப்டில் எழுத கோயிஞ்சாமி சபதம் பூண்டான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிடும் விபரீதம் அப்பொழுது கோயிஞ்சாமிக்குக் கிஞ்சித்தும் தெரிந்து இருக்கவில்லை. காலண்டர் ப்ரோக்ராம் ஒன்று எழுத ஆரம்பிக்கும் முன், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் code/scriptகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்திருந்தான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்ப்... சரி சரி. பில்ட்-அப் போதும். மேட்டருக்குப் போவோம். ஒரு காலண்டரில் என்னென்ன மாதங்கள் இருக்கிறது என்று தெரியவேண்டும். சுலபம், ஒன்று முதல் பன்னிரண்டு வரை உள்ள எண்கள். அடுத்ததாக ஒரு மாதத்தில் என்னென தேதிகள் உள்ளன என்று தெரியவேண்டும், சில மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும், சில மாதம் 29, சிலவற்றில் 30, 31 இப்படி. ஆக, அந்த ம...